தருமபுரி மாணவிகள் கலந்து கொண்ட சலங்கை அணியும் விழா .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தேன்தமிழ் நாட்டியாலயா பரதநாட்டிய பள்ளி, காவேரிப்பட்டிணம், தருமபுரி மாணவிகள் கலந்து கொண்ட சலங்கை அணியும் விழா (கெஜ பூஜை) கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள கவி ஈஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.
இதில் நிருத்திய கலா விபூஷன் ஸ்ரீ மதி Dr. S.மதுமொழி ஆனந்த் தலைமையில் குருவந்தனம் பெற்ற மாணவிகள் வி.பவிக்ஷா, ரா.ரதன்யா
பா.மகாதர்ஷினி, அ.சுஹாசினிபிரியா, ந.வேதிகா கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தேன்மொழி.( த.ஆ)மு.குமர வடிவேல் (மி.துறை)மு. ஸ்ரீரங்கன் கம்பன் கழக பொருளாளர் சிங்காரவேல் (ம.க.மையம்) மாணவிகளுக்கு வாழ்த்தி கேடயம், மெடல், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.
இறுதியாக கிருஷ்ணகிரி மாஹேரா இஸ்மாயில் மற்றும் தருமபுரி பூவிழி சக்தி நன்றி கூறினார்கள். இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்