தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின சார்பில் ரேசன் கடைகளில் புளுடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட வேண்டி ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின சார்பில் ரேசன் கடைகளில் புளுடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட வேண்டி ஆர்ப்பாட்டம். !

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின சார்பில் ரேசன் கடைகளில் புளுடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின சார்பில் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட தலைவர் சுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் நாகராஜன், மாவட்ட போராட்ட குழு தலைவர் விக்ரமன், மாவட்ட துணை தலைவர்கள் மூர்த்தி, சிவா, மாவட்ட இணை செயலாளர்கள் சந்திரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது....
நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்கில்  இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, உள்ளிட்ட பொருட்களை சரியான எடையில்  வழங்கப்பட வேண்டும்,
நியாயவிலைக் கடை பணியாளர்களின் பணி சுமையைக் கருத்தில் கொண்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் எடையாளர் ஒருவர் பணி நியமனம் செய்ய வேண்டும்,
வார விடுமுறை நாட்களில் பணி மேற்கொள்ள கூடாது என்று அரசாணை மற்றும் பதிவாளர் சுற்றறிக்கை இருந்தும் பெரும்பாலான மாவட்டங்களில் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் துணைப் பதிவாளர் ஆகியோரின் இசைவுடன் கூட்டுறவு சார்பதிவாளர்கள் மூலம் விற்பனையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கைவிட வேண்டும்,
ரேசன் கடைகளில் புளு டூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்க வேண்டும், 
உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.

தமிழக அரசை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள்.

செய்தியாளர்

மாருதி மனோ