கலைஞர் திடலில் 31-வது அகில இந்திய மாங்கணி கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சர் அர.சக்கரபாணி. !

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்குமாவட்டம் , கிருஷ்ணகிரி சுங்கசாவடி  அருகே  உள்ள கலைஞர் திடலில் 31-வது அகில இந்திய மாங்கணி கண்காட்சி திறப்புவிழா நடைபெற்றது. 

தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும், கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான அர.சக்கரபாணி ,கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட கழக செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA , கிருஷ்ணகிரி மேற்கு  மாவட்ட கழக செயலாளரும், ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான Y.பிரகாஷ்.,MLA , ஓசூர் மாநகர மேயர் .S.A.சத்யா, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார். இ.ஆ.ப ஆகியோர்  குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றி கலந்து  கொண்டு திறந்து வைத்தனர்.

இவ்விழாவில்  அரசு துறைசார்ந்த அலுவலகர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் தலைவர்கள், துணை தலைவர்கள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,என அனைவரும்  கலந்துகொண்டு மாங்கணி கண்காட்சி திறப்புவிழாவினை சிறப்பித்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ