சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு 1968 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் இன்று.!

வரலாறு

சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு 1968 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் இன்று.!

சுயமரியாதைத் திருமணச் சட்டத்திற்கு 1968 ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்கிய நாள் இன்று.(17.01.1968)

சுயமரியாதைத் திருமணச்சட்டத்தின் சாரம் :

உறவினர் அல்லது நண்பர் அல்லது மற்றோர் முன்னிலையில் கீழ்க்கண்ட வகையில் சுயமரியாதை மணம் அல்லது சீர்திருத்த மணம் என்றோ அல்லது வேறெந்தப் பெயரிலோ முறையாக நிறைவேறும் திருமணத்திற்கு இப்பிரிவு பொருந்தும்.


(a) மணமக்கள் இருவரும் அறிந்துள்ள மொழியில் ஒருவர் மற்றொருவரைச் சட்டப்படிக்கான மனைவி-யாகவோ அல்லது கணவனாகவோ ஏற்றுக்கொள்வதாகச் சாற்றுதல்,
அல்லது 


(b) மணமக்கள் இருவரும் ஒருவர் மற்றொருவருக்கு மாலை அணிவித்தல் அல்லது விரலில் மோதிரமணிவித்தல்
அல்லது


(c) தாலி அணிவித்தல்.