திருப்பத்தூரில் 31 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா.!

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 31 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா.!

திருப்பத்தூர் அடுத்த ஜம்மண புதூர் கிராமத்தில் 31 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட காளைகள் மந்தையில் சீறிப்பாய்ந்தன- காளையர்கள் உற்சாகம்

திருப்பத்தூர் மாவட்டம்,  ஜம்மணபுதூர் கிராமத்தில் மாபெரும் எருதுவிடும் திருவிழா ஊர் கவுண்டர் ஜெயக்குமார், ஊர் நாட்டார் ஜெயசீலன், ஊர் தர்மகர்த்தா சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் தலைமையில்  தலைமையில் நடைப்பெற்றது.  


திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு மந்தையில் சீறிப்பாய்ந்து ஓடின. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நொடியில் ஓடிக் கடந்து வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.100000 இரண்டாம் பரிசாக ரூபாய் 75000 மூன்றாம் பரிசாக ரூபாய் 50,000 உட்பட மொத்தம்   65 பரிசுகள் வழங்கப்பட்டது. 

திருவிழாவில் சுமார் 5000க்கும் மேற்பட்ட காளையர்கள் உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர்.

இந்த எருது விடும் திருவிழாவிற்கு வருவாய் துறை  வட்டாட்சியர்  கோட்டாட்சியர்   ஆகியோர் நேரில் ஆய்வு செய்து அனுமதி அளித்தனர். 
மற்றும் தீயணைப்பு துறை மருத்துவ துறை உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் நடைபெற்றது. 

திருப்பத்தூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ந.வெங்கடேசன்