காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு.!
கன்னியாகுமரி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை.!
டிசம்பர் 11
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் இ.கா.ப. தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் மனு நாள் இன்று(11.12.2024) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களின் மனுக்கள் மீது நேரடியாக விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள்.
இக்கூட்டத்தில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லசிவம், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.