கடையம் வடகால் கால்வாய் கரையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மகளிர் காங்கிரஸ் வட்டாரத் தலைவி சீதாலட்சுமி கோரிக்கை மனு .!

தென்காசி

கடையம் வடகால் கால்வாய் கரையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மகளிர் காங்கிரஸ் வட்டாரத் தலைவி சீதாலட்சுமி கோரிக்கை மனு .!

கடையம் வடகால் கால்வாய் கரையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மகளிர் காங்கிரஸ் வட்டாரத் தலைவி சீதாலட்சுமி கோரிக்கை மனு

தென்காசி ஜுன் 27

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடகால் கால்வாய் கரையை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோரிடம், கடையம் வட்டார மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி பார்வதி நாதன் கோரிக்கை மனுவினை அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, நான் கடையம் வட்டார மகிளா காங்கிரஸ் மகளிர் அணி தலைவியாக இருந்து கட்சிப் பணி செய்து மக்களுக்கு தொண்டாற்றி வருகிறேன்.

கடையம் ஊராட்சி ஒன்றியம், மேல கடையம் கிராமத்திற்கு உட்பட்ட வயல் பகுதிகளுக்கு கடையம் ராமநதி அணையில் இருந்து நீர்ப்பாசனம் வரக்கூடிய வடகால் கால்வாய் தூர் வாரும் பணி கடந்த 15 நாட்களாக நடந்து வந்தது. மேற்படி கால்வாயை தூர் வாரும்போது கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்திற்கு கிழக்கு பக்கம் விவசாயிகள் நடந்து செல்லும் கரையை தூர் வாரி விட்டு பாலத்திற்கு மேற்கே விவசாயிகள் நடந்து செல்லும் கரைபாதையை சரி செய்யாமல் பணியை முடித்து விட்டனர்.

மேற்படி கால்வாய் தூர் வாரும் பணி நடந்து கொண்டிருந்த போதே நானும் எங்கள் பகுதியைச் சார்ந்த விவசாயிகளும் பலமுறை கால்வாய் கரையை சரி செய்ய கூறி கேட்டபோது நீர்ப்பாசன அதிகாரி அந்தோணி என்பவர் கரையை சரி செய்து தருகிறேன் என்று கூறிவிட்டு தற்போது கரையை சரி செய்து தராமல் தூர்வாரும் பணிகளை முடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து மேற்படி அந்தோணியிடம் முறையிட்டபோது வேண்டுமானால் நீர்ப்பாசன வடகால் சங்கத் தலைவரிடம் கேட்டுக் கொள் என்று கூறிவிட்டார். சங்கத் தலைவர் கரையை சீர்படுத்தி தர மறுத்துவிட்டார். இதனால் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். விவசாயம் காப்போம், விவசாயியை காப்போம் என்று மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை பேணி காக்க போராடுகிறது இதற்கு எதிர்மறையாக வடகால் பாசன தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நீர் பாசன அதிகாரி அந்தோணி ஏ இ இருவரும் விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

ஆகவே, சமூகம் இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் வடகால் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணனை தகுதி நீக்கம் செய்யவும், நீர்ப்பாசன அதிகாரி அந்தோணி ஏஇ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வடகால் கால்வாய் கரையை சீர்படுத்தி தர வேண்டும் எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர்

AGM கணேசன்