கடையநல்லூரில் திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.!

தென்காசி

கடையநல்லூரில் திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்.!

கடையநல்லூரில் திமுக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

தென்காசி மே 9

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் 
காயிதே மில்லத் திடலில்  நகர திமுக சார்பில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் பல்லாண்டு என்னும் திமுக நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமாகிய மா.செல்லத்துரை தலைமை வகித்தார்.

மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ரஹீம், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முகமது அலி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் முருகன், கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீப் ரகுமான், துணைத் தலைவர் ராசையா, கடையநல்லூர் ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர திமுக செயலாளர் அப்பாஸ் வரவேற்புரை ஆற்றினார். இத்தாலியன் வீரப்பா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் என் ஆர் மணி, இஸ்மாயில், சாகுல் ஹமீது, அப்துல் காதர், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டி, ஷேக் தாவூத், முன்னாள் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி,கென்னடி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், பேரூர் செயலாளர்கள் வெள்ளத்துரை, தங்கப்பா, ராஜராஜன், அவைத்தலைவர் முருகையா, பொருளாளர் வெள்ளைச்சாமி,
 நகர துணை செயலாளர்கள் மஸ்தான் அலி, காசி, காமாட்சி, மாவட்ட பிரதிநிதிகள் ராமச்சந்திரன், திவான் மைதீன், தம்புராஜ் மற்றும் வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் நகர இளைஞரணி அமைப்பாளர் முகமது யாசின் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்