தென்காசியில் பாரதிய ஜனதா கட்சி ஆலோசனைக் கூட்டம்.!
தென்காசி

தென்காசியில் பாரதிய ஜனதா கட்சி ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மே 3
தென்காசி நகரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட தீவிர உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்த ஆலோசனை மற்றும் பூத் கமிட்டி நியமனம் குறித்த ஆலோசனை கூட்டம்14 மற்றும் 15 வார்டு நகர் மன்ற உறுப்பினர்கள் அலுவலகத்தில் வைத்து மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நகரத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் சக்தி கேந்திர தலைவர்கள் நாராயணன் ஆனந்தி முருகன் லட்சுமண பெருமாள் மாரியப்பன் முத்துகிருஷ்ணன் பாலசுப்பிரமணியன் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற பூத் கமிட்டி பொறுப்பாளர் மந்திர மூர்த்தி கமிட்டி அமைப்பது சம்பந்தமாக ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்ட முடிவில் சேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்