வேட்டையாட சென்ற இடத்தில் இளைஞர் பலி.! யானை மிதித்து கொன்றதாக நாடகமாடிய நண்பர்கள் 13 பேர் கைது.!

நீலகிரி

வேட்டையாட சென்ற இடத்தில் இளைஞர் பலி.! யானை மிதித்து கொன்றதாக நாடகமாடிய நண்பர்கள் 13 பேர் கைது.!

https://youtu.be/CSy80GuYC_k?si=RmWL6jUE9qEfDlCs

நீலகிரியில் யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இளைஞர் உயிரிழந்தது தொடர்பான உண்மையான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர் சோலை மூன்றாம் டிவிஷன் பகுதியில் ஜம்ஷித் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை யானை தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அவரது உடலைக் கண்டு ஜம்ஷித் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் ஜம்ஷித் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால் அவரது உடலில் யானை தாக்கியதற்கான எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை அதிகாரிகள் ஜம்ஷித் உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஜம்ஷித் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. அவர் மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் வனவிலங்கு வேட்டைக்கு சென்றபோது துப்பாக்கி தோட்டா பாய்ந்ததில் ஜம்ஷித் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. திருமணம் செய்வதாக உறுதி..

வேறு பெண்ணுடன் நிச்சயம்.. வங்கி ஊழியர் கைது! துப்பாக்கியால் சுட்டு இளைஞர் உயிரிழந்ததை யானை தாக்கி இறந்ததாக அவரது நண்பர்கள் நாடகமாடியதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்டதாக மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் இருந்து சட்டவிரதமாக பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், வன விலங்கு வேட்டைக்கான வெடிப் பொருட்ள்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, "கடந்த ஜனவரி 24ஆம் தேதி இரவு நாட்டு துப்பாக்கிகளுடன் எடுத்துக்கொண்டு அனைவரும் வனவிலங்கு வேட்டைக்கு சென்றுள்ளனர். அப்போது ஜம்ஷித் வயிற்றில் குண்டடிப்பட்டு காயமடைந்த நிலையில் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் அவருடன் சென்றவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அச்சமடைந்துள்ளனர். குண்டு துளைத்ததால் ஜம்ஷித் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியே தெரிந்தால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுவதோடு சட்டவிரோதமாக வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதாக வழக்கையும் சந்திக்க நேரிடும் என நினைத்த அவரது நண்பர்கள் இதனை யானை தாக்கி உயிரிழந்தார் என மாற்றியுள்ளனர்.

சந்தேக மரணம் பிரிவில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஜம்ஷித்துடன் வேட்டைக்கு சென்ற நான்கு பேர் தலைமறைவான நிலையில் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். இதில் நவ்ஷாத், ஹைதர் அலி,சதீஷ், ஜாஃபர் அலி ஆகியோர் சிக்கினர். இதைத் தொடர்ந்து கொலையை மறைக்க முயன்ற விவகாரத்தில் உதவியதாக அன்வர், உஸ்மான், ரஃபிக் ,ஜெம்ஷித், அன்சாத், சாதிக் அலி,அன்வர், ஜினேத் என அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.