தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து அசத்திய மேடவாக்கம் ப.ரவி பிறந்தநாள்.!
செங்கல்பட்டு

தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து அசத்திய மேடவாக்கம் ப.ரவி பிறந்தநாள்.!
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவரும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், தற்போதைய தி.மு.க. சென்னை தெற்கு மாவட்டம், தலைமை பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றியக் கழகச் செயலாளருமான மேடவாக்கம் ப.ரவி .நேற்றைய தினம்(24/06/2025) தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் 1000 பேருக்கு அறுசுவை உணவு வழங்கி சிறப்பித்தார்.
பொதுவாக கட்சி நிகழ்ச்சியானாலும் மக்கள் நலம் சார்ந்த நிகழ்ச்சியானலும் மிகவும் சிறப்புடன் செய்து மக்கள் தலைவராக அப்பகுதியில் அசைக்க முடியாத நபராக வலம் வரும் இவர்.தற்போது ஊராட்சி மன்ற தலைவராக அவருடைய மனைவி சிவபூசனம் ரவி மற்றும் அவருடைய மகன் ஆர்.எஸ். லோகேஸ்வராவை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராகவும் தி.மு.க. கட்சிக்கு கொண்டு வந்து மிகவும் பலம் வாய்ந்த தி.மு.க. கோட்டையாக உருவாக்கியுள்ளார்.
கடந்த வாரம் இவருடைய மகன் ஆர்.எஸ். லோகேஸ்வரா அரசு பள்ளிக்கு சுமார் 9 லட்சம் மதிப்புள்ள உதவிகளை வழங்கி தி.மு.க. கட்சிக்கும், தன் தந்தைக்கும் பெருமை சேர்த்ததை மாவட்ட செயலாளரும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியம் பாராட்டியது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றிய துணை செயலாளர்.எச்.டி.போஸ், ஒன்றிய பெருந்தலைவர் சங்கீதா பாரதிராஜன், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ஒகேஎஸ்.சதீஷ், மேடவாக்கம் இளைஞரணி அமைப்பாளர் கே.ராஜேஷ்,எம்.என்.பி.ரமேஷ்,
என்.ஆர்.கே.கேசவன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் வாழ்த்தியும், வாழ்த்தினையும் பெற்றனர்.
செய்தியாளர்
சுகுமாரன்