ஓசூர், பெலகொண்ட பள்ளியில் கிராமத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கிருஷ்ணகிரி சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பெலகொண்ட பள்ளியில் கிராமத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, கிருஷ்ணகிரி சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஓசூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுவர் இல்லத்திலிருந்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களால் மீட்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிருஷ்ணகிரியில் உள்ள ஜிப்சி சிரார் இல்லத்தில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முகாமில் குழந்தைகளின் உடல் மற்றும் மனநல பரிசோதனைகள் நடைபெற்று, தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் உளவியல் ஆலோசனையும் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியில்
செல்வம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொ)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கிருஷ்ணகிரி மாவட்டம்,
நா.செந்தில்குமார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர்.
அ.பன்னீர்செல்வம், உறுப்பினர், குழந்தை நலக் குழுமம்
கிருஷ்ணகிரி மாவட்டம்.,
சுபாஷ், பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா)மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ