திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

தென்காசி

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா.!

மேலகரம் பேரூர் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் பங்கேற்பு

தென்காசி மே 7

தென்காசி தெற்கு மாவட்டம் கிழக்கு ஒன்றிய திமுக மேலகரம் பேரூர்  திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரும், கழக தலைவருமான மு.க ஸ்டாலின்  ஆணைக்கிணங்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கோடை வெயிலை முன்னிட்டு பொது மக்களின் தாகத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜீவானந்தம், முன்னாள் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் வேலுச்சாமி, யாகவா சுந்தர், நன்னை பால சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் கபிலன், சேகர், லட்சுமி சந்திரன் பார்வதி பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலகரம் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஏ ஆர் எம் அழகு சுந்தரம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் டி ஆர் கிருஷ்ணராஜா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜே கே ரமேஷ்,  இளைஞரணி  பவுல், ஆனந்த், வார்டு செயலாளர்கள் காசி விஸ்வநாதன், கணேசன், குருசாமி, ஆறுமுகம்,குத்தாலிங்கம், ஈனமுத்து பாண்டியன், சலீம், வீரபாண்டியன், ஆயிரப்பேரி முத்துவேல், பகவதி ராஜ் மீனாட்சி சுந்தரம், மாரியப்பன், மனோகர் விக்கி நன்னை மாரி கதிர் நன்னை சுந்தர் அருணன் மணி என்ற ஈஸ்வரன் பட்ட முத்து குமாரவேல், பிச்சை மணி, சந்திரன், பூபதி பாண்டியன், முருகன், இளைஞரணி பார்த்திபன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கொக்கி குமார், தென்காசி தெற்கு மாவட்ட கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், மேலகரம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன், துணை அமைப்பாளர்   அருண், இளைஞர் அணி நிர்வாகிகள் கமல் ஷேக் ராஜா பிரவீன் சின்ன ராஜா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்