தென்காசி அரசு மருத்துவமனையில் 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு வசிப்பிட கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்.!
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு வசிப்பிட கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி பார்வையிட்டார்
தென்காசி மே 29
தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்திற்கு என பல்வேறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் தென்காசி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாக துறையின் மூலம் தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள் நோயாளிகளுக்கு உதவிக்கு வரும் நபர்கள் தங்குவதற்கு ஏதுவாக ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறப்பு வசிப்பிட கட்டிடத்தினைகாணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில்இணை இயக்குனர் நல பணிகள் பிரேமலதா நகர மன்ற தலைவர் சாதிர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் பொறியாளர் ஹசீனா உதவி செயற்பொறியாளர் பிரியா காங்கிரஸ் மாடசாமி ஜோதிடர் நகர் மன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்