தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு.!

கிருஷ்ணகிரி

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு.!

உலக பட்டினி தினத்தையொட்டி கிருட்டினகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. 

மக்கள் உணவு இன்றி தவிப்பதற்கு போர், உள்நாட்டு நெருக்கடிகள், பருவநிலை மாற்றம், இயற்கை பேரிடர், பெருந்தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் மக்களுக்கு போதிய உணவு கிடைப்பது இல்லை,

இதே போல இன்றும் கூட பேருந்து நிலையம், ரயில்வே நிலையங்கள் மட்டுமன்றி மக்கள் கூடும் இடங்களில் உணவுக்காக கையேந்தி நிற்பதை பார்க்க முடிகிறது.

இந்த அவலத்தினை போக்கிடும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில தலைவர் விஜய் உலக பட்டினித் தினத்தில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் மதிய உணவு வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுஇருந்தார்.

இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பனஹள்ளி பேருந்து நிலையம் அருகில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்டம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் உத்தரவின் படி  நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றி கழகத்தின் வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

இதனை தமிழக வெற்றி கழகத்தின் வேப்பனஹள்ளி ஒன்றிய செயலாளர் நாகராஜ் தலைமையில் தமிழகத்தில் பட்டினி என்பது இல்லை என்பதை உருவாக்கிடும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவினை வழங்கி மனிதனாக பிறந்த அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி, ஆகியவை சமமாக கிடைத்திட வேண்டும் என வலியுறுத்தி அன்னதானம் வழங்கும் பணியினை தவக்கி வைத்தார். இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

அப்போது வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றி கழகச் சேர்ந்த அம்ரிஷ், ஆனோஸ், ஜெகதீஷ், வி.சத்திவேல், ஈஸ்வரி, ஜினோத், மயில்சாமி, முருகேசன், மஞ்சு, சங்கர்,  பி.சத்திவேல், சந்திரசேகர், பிரேம் குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தார்கள்.

செய்தியாளர்

மாருதி மனோ