தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.!

தென்காசி

தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்.!

தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தென்காசி மே 08

தென்காசி மாவட்ட மனிதநேய  ஜனநாயக கட்சி  புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்ட செயலாளர் முகம்மது யாக்கூப் ஒருங்கிணைப்பில் மாவட்ட அவைத் தலைவர் சையத் அலி தலைமையில் தென்காசி பாபக்கி தங்கள் மதரஸாவில் வைத்து நடை பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மனிதநேய வர்த்தகர் அணி மாநில துணைச் செயலாளர் ஆதம் ஹனிபா, மாவட்ட பொருளாளர் சிக்கந்தர், மாவட்ட துணைச் செயலாளர் இஸ்மாயில், சங்கை இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக் கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி இணைபொதுச் செயலாளர் கேப்டன் செய்யது அஹமது ஃபாரூக், மாநில செயலாளர் நெய்வேலி இப்ராஹிம், மாநில செயலாளர் நாகை முபாரக், மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால், திமுக தென்காசி நகர செயலாளரும் நகர் மன்ற தலைவருமான சாதிர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தென் மண்டல துணைச் செயலாளர் சித்திக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில விவசாய அணி செயலாளர் முகமது அலி , திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் அப்துல் ரஹிம், இந்திய தேசிய லீக் மாநில துணைத் தலைவர் சுலைமான் சேட், தமிழக வெற்றிக்கழகம் பொறுப்பாளர் ரசாக், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சிலம்பாட்டம் சாகுல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தென்காசி நகர அவைத் தலைவர் ஜெய்லானி பொருளாளர் கோபி வடகரை நகரச் செயலாளர் ஜாபர் அலி, அவை தலைவர் கிடாவெட்டி இஸ்மாயில், பொருளாளர் பாரூக் மற்றும் தென்காசி பைசல், பீர் முகமது , ரஃபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகர செயலாளர் போரிங் பாதுஷா நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்