தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாம்

தென்காசி

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாம்

தென்காசி ஏப் 16


தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில்  மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் ஈதல் இதயம் அறக் கட்டளை இணைந்து ரத்ததான  முகாமில் குருதி தானம் வழங்கியது. தென்காசி மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் பி பிரேமலதா  அறிவுறுத்தலின்படி தென்காசி மாவட்ட தலைமை  மருத்துவ மனையின் குருதி வங்கியில் ரத்த அலகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சியாக குருதி வங்கி அலுவலர் டாக்டர் எம் பாபு மற்றும் குழுவினரின் முயற்சியால் ஈதல் இதயம் தென்காசி அறக்கட்டளை இணைந்து இந்த சிறப்பு ரத்ததான முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின்  வழிகாட்டுதலில் இந்த முகாம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தென்காசி அரசு மருத்துவமனை கண் மருத்துவர் டாக்டர் ராஜலக்ஷ்மி   அனுமதியுடன் கண் பகுதியின் ஆண்கள் வார்டு பகுதியில் வைத்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. உறைவிட மருத்துவர் டாக்டர் செல்வ பாலா சிறப்பான ஏற்பாடுகளை செய்து தந்து இம்முகாம் சிறப்பாக நடை பெற்றது   ஈதல் இதயம் அறக்கட்டளை தென்காசியின் நிறுவனர் ஜே ஆகாச மூர்த்தி மற்றும் நிர்வாக இயக்குனர் எம் மாரியப்பன் பொதுமேளாளர் செந்தில்குமார் ஆகியோர் தங்களது TAF IAS அகாடமி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் தலா 80 பேர் கலந்து கொண்டு குருதி தானம் வழங்கினர்.

இந்த குருதி தான முகாமில் 80-ற்கும் மேற்பட்ட பல்வேறு ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டது.  சிறப்பாக நடைபெற்ற இம் முகாமில் பங்கேற்று குருதி வழங்கிய அமைப்பினர் மற்றும் குருதிக்கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்