போதை பழக்கத்திற்கு அடிமையானோருக்கான சிகிச்சை முகாம்.!

Puducheri

போதை பழக்கத்திற்கு அடிமையானோருக்கான சிகிச்சை முகாம்.!

போதை பழக்கத்திற்கு அடிமையானோருக்கான சிகிச்சை முகாம்: எதிர்கட்சி தலைவர் இரா. சிவா துவக்கி வைத்தார்.!

பாரத மாதா ஒருங்கிணைந்த மதுபோதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமும் புதுவை அரசு சமூக நலத்துறையோடு இணைந்து, போதைப்பொருள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று நடைபெற்றது.

மதர் அறக்கட்டளை தலைவர் கோபால் பிள்ளை வரவேற்புரை நிகழ்த்தினார். சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா கலந்துகொண்டு, குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து, வாழ்த்துரை வழங்கி போதை பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சைபெற வந்தவர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மாவட்ட ஆட்சியர் சோம சேகர் அப்பாராவ் கோட்டாரு, வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ கண்காணிப்பு அதிகாரி பாமகள் கவிதை, திட்ட ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஹாலித், தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்க தலைவர் அங்காளன், தொகுதி துணை செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், சபரி, ராஜி, ஏழுமலை, தங்கராசு, காசிலிங்கம், மிலிட்ரி முருகன், திலகர், கார்த்திகேயன், வாசு, முருகையன், அபிமன்னன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.