வெண்ணம்பள்ளி கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி
கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலா நடைப்பெற்றது, இதில் அம்மன் வேடமணிந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வெண்ணம்பள்ளி, சூரன்குட்டை, எம்.டி.வி.நகர் ஆகிய கிராமங்கள் இணைந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் மாரியம்மன் திருவிழா மற்றும் சித்திரை திருவிழா வெகு விமர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அக்னி நட்சத்திரத்தின் உக்கிரத்தில் இருந்து மக்களை காக்கும் வகையில் உற்சவ மூர்த்திகளின் திரு வீதி உலா மேள தாளங்களுடன் நடைபெற்றது.
இதில் அலங்கரிக்கப்பட்ட புஸ்ப பல்லாக்கில் எழுந்தருளிய கக்குமாரியம்மன், காளியம்மன், கெங்கையம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய நிலையில் திருவீதி உலா நடைபெற்றது,
சூரன் குட்டை ஶ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் திருக்கோவிலில் இருந்து துவங்கிய இந்த திருவீதி உலா சூரன்குட்டை, எம்.டி.வி.நகர்,
ஏரிக்கரை வழியாக வெண்ணம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக சென்ற இந்த உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலாவில் பரமசிவன், பார்வதி, காளி, மாரியம்மன், வெக்காளியம்மன், அங்காளம்மன், முனியப்பன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்தும் பக்தர்கள் மேளதாளங்களுடன் கலந்துகொண்டனர்.
மேலும் இந்த உற்சவ மூர்த்திகளின் திருவீதி உலாவில் தமிழகத்தில் நிலவி வரும் அக்கினி நட்சத்திரத்தின் தாக்கத்தினை குறைத்து நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திடவும், மக்கள் யாவரும் நலமுடன் வாழவும் வேண்டி உற்சவ மூர்த்திகளுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சூரன் குட்டை, வெண்ணம்பள்ளி, எம்.டி.வி. நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் கிராம மக்களும் செய்து இருந்தனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த மாரியம்மன் திருவிழாவில் கிராமங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.