ஐ பி எல் 2025 ரத்து - போர் பதற்றம் காரணமாக போட்டி ரத்து. ! முக்கிய அறிவிப்பை வெளியிடும் BCCI. !!
IPL 2025

ஐ பி எல் 2025 போர் பதற்றம் காரணமாக வீரர்களின் பாதுகாப்பு குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசிக்த் வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக இந்திய பகுதிகள் மீது, பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை பொழிந்தது. இருப்பினும் நமது ராணுவம் அந்த ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தது. எல்லைக்காட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலால் பொதுமக்களும் கொல்லப்பட்டதால், இந்திய ராணுவமும் பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல் நடத்தி பதிலடி தந்துள்ளது. இந்த சம்பவங்களால் இருநாடுகளுக்கு இடையே, போர் பதற்றம் நிலவுகிறது.
கைவிடப்பட்ட போட்டி:
பாகிஸ்தானை ஒட்டியுள்ள பஞ்சாப் மாநிலத்தின் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த, ஐபிஎல் லீக் சுற்று போட்டி பாதியிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. எல்லைப்பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் திடீர் தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு போட்டி கைவிடப்பட்டது. மைதானத்தில் இருந்து ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு, வீரர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, இன்று அவர்கள் சிறப்பு ரயில் மூலம் தர்மசாலாவில் இருந்து வெளியேற்றப்பட உள்ளனர். இதனிடியே, வரும் 11ம் தேதி அங்கு நடைபெறவிருந்த மும்பை மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டியும், அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி நிறுத்தி வைப்பு?
கிரிக்கெட் போட்டிக்கான மைதானங்கள் எதுவும் தற்போது தாக்குதலுக்குள்ளாகவில்லை. இருப்பினும் நிலவி வரும் பதற்றம் காரணமாக போட்டி தற்காலிகமாக கூட நிறுத்தி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், தற்போது அவர்கள் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய பிசிசிஐ மற்றும் இந்தியா கூடுதல் உத்திரவாதம் அளிக்க வேண்டும் என்பது அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது. ஒருவேளை வெளிநாட்டு வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அது பிசிசிஐ-க்கு பெரும் களங்கமாக மாறக்கூடும். எனவே பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, நடப்பு லீகை இடைக்காலமாக நிறுத்தி வைக்கக் கூடும். இதுதொடர்பாக பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தி முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய ஐபிஎல் போட்டி:
போர் பதற்றம் தென்மாநிலங்களில் பெரிதாக எதிரொலிக்காவிட்டாலும், பாகிஸ்தான் எல்லையோர மற்றும் வடமாநிலங்களில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் தான், இரவு 7.30 மணிக்கு லக்னோவின் ஏக்னா மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில்,லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அதேநேரம், இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் தற்போது வரை எந்தவித உத்தரவாதமும் இல்லை. போர் பதற்ற சூழலில், விளையாட்டு வீரர்களுக்காக கூடுதல் பாதுகாப்பு வழங்குவது என்பது சாத்தியமற்றதாகவே தெரிகிறது. எனவே வீரர்களின் பாதுகாப்பு கருதி குறிப்பாக வெளிநாட்டு வீரர்களின் கவலையை கருத்தில் கொண்டு, விரைவிலேயே நல்ல முடிவை எடுக்கும் என கூறப்படுகிறது.