வீட்டில் கொள்ளையடிக்கச் சென்ற ஆசாமிகள்.! பக்கத்து வீட்டு கூச்சலால் தெரித்து ஓடியது எப்படி?
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியை அடுத்துள்ள கோட்டார் அருகே வெளிநாட்டில் பணிபுரிபவர் வீட்டில் நேற்று நள்ளிரவில் புகுந்த இரண்டு திருடர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
இந்த காட்சியை அந்த வீட்டின் உள்ளே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி மூலமாக வெளிநாட்டில் இருந்தபடியே வீட்டு உரிமையாளர் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக தனது பக்கத்து வீட்டிற்கு தொலைபேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் திருடர்கள் நுழைந்த வீட்டிற்கு வந்து திருடன்,திருடன் என கூச்சலிடவே வீட்டில் திருடி கொண்டு இருந்த திருடர்கள் அலறி அடித்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து தப்பி ஓடினர்.
சிசிடிவியின் காட்சியின் மூலம் வீட்டில் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது பற்றி கோட்டார் போலிஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
மேலும் சி சி டி வி காட்சிகளை வைத்து தப்பிச் சென்ற திருடர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.