முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி கொண்டாடினர்.!
திண்டுக்கல்

ஆத்தூர்- சித்தையன் கோட்டை திமுக பேரூர் கழகம் சார்பாக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உள்ள திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை அரசு பள்ளிகளில் 2025 -2026ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தொடங்கி வைத்தார் .
முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மாணவ- மாணவிகள் மற்றும் தமிழக அனைத்து கட்சி நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூர் கழக திமுக நிர்வாகிகள் சார்பாக சித்தையன் கோட்டை பகுதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடிகளை ஏற்றி வைத்தும் இனிப்புகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது சித்தையன் கோட்டை அண்ணா பேருந்து நிலையம் திடலிலும், வடக்குத்தெரு பள்ளிவாசல் எதிரே உள்ள மதினா மண்டபம் அருகிலும், புதுப்பட்டி மற்றும் அழகர்நாயக்கன்பட்டி திடலிலும் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ராமன் அனைத்து பகுதிகளிலும் உள்ள கொடிக்கம்பங்களில்கொடிகளை ஏற்றியும் நிகழ்ச்சிகளை துவங்கி வைத்தார் .
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய சித்தையன்கோட்டைநகர செயலாளர் சக்திவேல் அனைத்து பகுதி மக்களுக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோசங்களும் எழுப்பி உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற்றது.
.உடன் இந்நிகழ்வில் சித்தையன் கோட்டை பேரூராட்சி தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் முகமது ரபிக்,வக்கீல் செல்லமரக்காயர், ரபிக் மைதீன், சௌந்தர பாண்டியன், சுரேஷ், முத்து, ஜெயராமன், லாவண்யா- சுரேஷ், தங்கப்பாண்டி மற்றும் திமுக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.
செய்தியாளர்
அழகர் சாமி