சொத்திற்காக மாமனை சராமரியாக வெட்டிக் கொன்ற மைத்துனன்.! போலீஸ் வலை வீச்சு .!

ஜோலார்ப்பேட்டை

சொத்திற்காக மாமனை சராமரியாக வெட்டிக் கொன்ற மைத்துனன்.! போலீஸ் வலை வீச்சு .!

ஜோலார்பேட்டை அருகே சொத்து பிரச்சனை காரணமாக மாமனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மைத்துனர்


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் திம்மராயன்(48) ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார். 

இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவர் தனது மூன்று ஏக்கர் நிலத்தை 38 லட்சத்திற்கு  பைனான்சியரிடம் வைத்துள்ளதாக தெரிகிறது.

இதனை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திம்மராயன் அந்த பைனான்ஸ் நபர்களிடமிருந்து வாங்கி தனது பெயரில் மாற்றியுள்ளார்.


இதன் காரணமாக சக்கரவர்த்தி மற்றும் திமராயன் இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இன்று காலை ஜோலார்பேட்டை அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள நிலத்தில் வாழை தோப்பில் திம்மராயன் இருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த சக்கரவர்த்தி தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திம்மராயன் உறவினர்கள் தரையில் புரண்டு கத்தி கதறி அழுதனர். இச்சம்பவம் காண்போர் நெஞ்சை கண்கலங்கச் செய்தது


மேலும் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர். 

சொத்து பிரச்சனை காரணமாக சொந்த மாமனையே மைத்துனர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்