ஸ்ரீ வெள்ளாவி கருப்பனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு.!
ஆண்மீகம்
சித்தையன் கோட்டை- தைத்திருநாளை முன்னிட்டு நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ வெள்ளாவி கருப்பிற்கு பொங்கல் வைத்து ராஜகுல பெருமக்கள் வழிபாடு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட தாமரைக் குளத்தில் ராஜ குலத்தோர் சார்பாக உலகில் வாழும் அனைத்து உயிர்கள் நலம்வேண்டியும், மழை வரம் வேண்டியும் ஸ்ரீ வெள்ளாவி கருப்பிற்கு பொங்கல் வைத்து பூஜை புனஸ்காரங்களோடு செய்து வழிபாடு செய்வது பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் இன்று ஸ்ரீ வெள்ளாவி கருப்பிற்கு பூஜை காசு பெறாமல் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்து அனைத்து உறவுகளும் வழிபாடு செய்தனர். இந்த வழிபாட்டு நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட ராஜகுல மக்கள் ஒன்றிணைந்து அனைவரும் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.
செய்தியாளர்
அழகர் சாமி
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi (MR)