திருப்பாற்கடல் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் பிரேமலதா விஜய்காந்த் சாமி தரிசனம்.!
ராணிப்பேட்டை

திருப்பாற்கடல் அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள 107 திவ்யதேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அலங்கார பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் மட்டும் அன்னதானத்தை வழங்கினார்..
அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் :
புண்ணிய ஸ்தலமாக விளங்கும் திருப்பாற்கடல் கோவிலுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை ஆலயத்திற்கு வருவது வழக்கம் அதுமட்டுமில்லாத கட்சி நிர்வாகிகளை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார் மேலும் உலகத்தில் பிரசித்தி பெற்ற இந்தத் திருப்பாற்கடல் திருத்தளத்தில் எம்பெருமான் ஆசிர்வாதம் வாங்குவதற்காக இங்கு வந்துள்ளேன் என கூறினார்.
தொகுதியின் மறுவரை குறித்து கேட்ட கேள்விக்கு 39 தொகுதியில் ஒரு தொகுதி குறைந்தால் கூட தேமுதிக ஒத்துழைக்காது எனவும் அதேபோல் தேமுதிக திமுகவுடன் நெருங்கிய வருவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பத்திரிக்கையாளர்கள் இதுபோன்று திருத்தி கூறி வருவதாகவும் நாங்கள் கட்சி பணிகளை மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்காக செயலாற்றி வருவதாகவும் தெரிவித்தவர் செய்தியாளர்கள் எழுதுவதற்கு நான் பதில் அளிக்க இயலாது என்று தெரிவித்தார். .
சென்னையில் இன்று ஒரே நாளில் சுமார் 8 இடங்களில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு குறித்து கேட்டதற்கு சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து உள்ளதாக குற்றம் சாட்டினார்..
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா ஆணவ படுகொலை நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு கருத்து கூறியதற்கு இதை எல்லாமே நீங்கள் ராஜாவிடம் தான் கேட்க வேண்டும் என்னிடத்தில் கேட்க வேண்டாம் கருத்து கூறுபவர்களிடமே கருத்து கேளுங்கள் எனக் கூறினார் 2026 தேர்தல் குறித்து கேட்டதற்கு 2026 ஆண்டு வருவதற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது அப்பொழுது செய்தியாளர்களை அழைத்து அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து தெரிவிப்பதாக இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்..
இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனோகர் மற்றும் நகர ஒன்றிய பேரூர் மகளிர் அணியினர் என கழக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அருள் அரசன்