ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரம்மன் ஆலய 25 வது ஆண்டு திருவிழா .!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரம்மன் ஆலய 25 வது ஆண்டு திருவிழா .!

ஓசூரில், ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரம்மன் ஆலய 25 வது ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரம்மா ஆலய 25 வது ஆண்டு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமங்கள், அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரங்கள், அர்ச்சனை நைவேத்தியம், மகா மங்கள ஆரத்தி, தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. மேலும் குலதெய்வங்களுடன் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரம்மன் சிறப்பு அலங்காரங்களுடன் காட்சியளித்து அருள் பாலித்தார்.

காலை முதலே, கலச ஷிதாபனன், பிரதான ஹோமம், ருத்ர ஹோமம், லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம், ஹோமம், ஜயாதி ஹோமம், மஹா பூர்ணாஹுதி, கும்பசம்ப்ரோக்ஷணம், சிறப்பு அலங்காரம், மஹா அபிஷேகம், மஹா அபிஷேகம், மகா அபிஷேகம், மகா அபிஷேகம் பின்னர் மகா மங்கள ஆரத்தி கற்பூரம் காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ