தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - உச்சநீதி மன்றம் .!

தக் லைப்

தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - உச்சநீதி மன்றம் .!

கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

குண்டர்கள், கும்பல்கள் நமது வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது; உரிய சான்றிதழ் பெற்ற பின் ஒரு திரைப்படத்தை வெளியிட எல்லாருக்கும் உரிமை உண்டு; அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அது வேண்டுமா, வேண்டாமா என மக்கள் முடிவு செய்யட்டும்; திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது;

படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். அரசு இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று 'தக் லைஃப்' வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டம் நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு சினிமா துறையிலும், கர்நாடகாவிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.