அகமதாபாத் விமான விபத்தில் கிடைத்த நகைகள், ரொக்க பணம் ஆகியவை இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். !

அகமதாபாத்

அகமதாபாத் விமான விபத்தில் கிடைத்த நகைகள், ரொக்க பணம் ஆகியவை இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும். !

கடந்த ஜூன் 12-ஆம் தேதி அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து, பலரது உயிரை பறித்ததோடு, பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

லண்டன் செல்லவிருந்த அந்த போயிங் விமானம், முதலில் பி.ஜே. மருத்துவக் கல்லூரி சிவில் மருத்துவமனையின் உணவக கட்டிடம் மீது மோதி, அதன் பிறகு மருத்துவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இந்த இரண்டு கட்டிடங்களுமே கடுமையாக பாதிக்கப்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டன.

விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இருந்த ராஜு படேல் என்ற கட்டுமானத் தொழில் அதிபர். சம்பவ இடத்திற்கு முதலில் விரைந்தவர்களில் ஒருவர். அந்த சம்பவத்தை விவரித்த அவர் “முதல் 15-20 நிமிடங்கள், விமானத்தின் உடைந்த பாகங்களுக்கு அருகில் கூட எங்களால் செல்ல முடியவில்லை. எங்கள் குழுவிடம் காயமடைந்தவர்களை தூக்கி செல்ல ஸ்ட்ரெச்சர்கள் இல்லை. ஆனால், அவர்கள் தைரியத்தை இழக்கவில்லை. கிடைத்த சேலைகளையும், துணிகளையும் பயன்படுத்தி காயமடைந்தவர்களை தூக்கினோம். எங்களிடம் இருந்ததை வைத்துத்தான் பணியாற்றினோம். எப்படியாவது உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் மனதில் இருந்தது. முதல் தீயணைப்பு வண்டியும், 108 ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு வந்ததும், நாங்கள் மீட்புப் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டோம்” என்றார்.

சம்பவ இடத்தில் சிதறி கிடந்த பொருட்கள் குறித்து பேசிய ராஜு படேல், “எரிந்த பைகள், உடைந்த பொருட்கள் தரையில் பரவிக் கிடந்தன. அவற்றுக்கிடையே 70 பவுன் தங்க நகைகள், 80,000 ரூபாய் ரொக்கம், பல பாஸ்போர்ட்டுகள், ஒரு பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றை நாங்கள் மீட்டோம். இந்த எல்லாப் பொருட்களையும் உடனடியாக போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டோம்” என்று தெரிவித்தார்.

அதிகாரிகள், ராஜு படேலையும் அவரது குழுவினரையும் அவசர சேவைக் குழுவினர் பொறுப்பேற்கும் வரை, அதாவது இரவு 9 மணி வரை சம்பவ இடத்திலேயே இருக்குமாறு அனுமதித்தனர். அதன் பிறகு, ராஜு படேலின் குழு, உடைந்த பாகங்களுக்குள் மேலும் ஏதாவது இருக்கிறதா என்று தேடும் பணியை தொடங்கியது.

மேலும் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுதல் தெரிவித்து வருகின்றனர்.