திரூரில் ஆக்ரோஷமான யானை ஒருவரை தூக்கி எறிந்த காட்சி.!

திரூர்

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் புதியங்கடி உரூஸ் திருவிழாவின் போது  ஸ்ரீ குட்டன் என்ற யானை மதம் பிடித்து வெறித்தனமாக ஓடியது, இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

விழாவின் இறுதி நாளில் நள்ளிரவு சமயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.  

ஆக்ரோஷமான யானை ஒரு நபரை தூக்கி எறிந்தது, அவர் ஆபத்தான நிலையில் கோட்டக்கல் MIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பீதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக யானை பிளிறிக் கொண்டே இருந்தது.  அதிகாலை 2:15 மணிக்கு யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் பாகன்கள்.  இதனால் அதிக சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.