பீகாரில் மாணவர்கள் போராட்டம்.! தடியடி நடத்தி கலைக்க முயன்ற போலீசார்.!
பீஹார்
பீகாரில் மாணவர்கள் போராட்டம் தண்ணீர் பீச்சியும் தடியடி நடத்தியும் போராட்டத்தை களைக்க முயன்ற போலீசார்.!
பீகார் பாட்னாவில் மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக மாணவர்கள் போராட்டத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தேர்வில் ஊழல், முறைகேடு, வினாத் தாள் கசிவு ஆகியவற்றை ஆகியவற்றை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஊழலை நிறுத்துவதற்குப் பதிலாக, மாணவர்களை குரல் எழுப்ப விடாமல் தடுக்கப்படுகிறார்கள் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள்.
இந்த கடும் குளிரில் இளைஞர்கள் மீது தண்ணீர் பீரங்கி மற்றும் லத்தி சார்ஜ் செய்வது மனிதாபிமானமற்ற செயல் ஆகியவை பாஜகவின் இரட்டை இயந்திரம் இளைஞர்கள் மீதான இரட்டை அட்டூழியங்களின் அடையாளமாக மாறியுள்ளது என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.