வக்பு சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை.!

புதுடில்லி

வக்பு சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை.!

வக்ஃபு சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலை.

பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோத செயல்முறைகள் கடும் கண்டனத்துக்குரியது. 

தொடர்ந்து அனைத்து விவகாரங்களிலும் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் பாஜக அரசு, வக்ஃபு திருத்த மசோதாவின் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிலும் ஜனநாயகத்தை படுகொலை செய்திருக்கிறது. 

இன்று நடைபெற்ற வக்ஃபு திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆ. ராசா,கல்யாண் பானர்ஜி, முகமது ஜாவேத், அசாதுதீன் ஓவைசி, நசீர் ஹுசைன், மொஹிபுல்லா, 
முஹம்மது அப்துல்லா, அரவிந்த் சாவந்த், நதீம்-உல் ஹக், இம்ரான் மசூத் ஆகிய 10 எதிர் கருத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்ற கூட்டுக்குழு வக்ஃபு திருத்த மசோதா தொடர்பாக நாடு முழுவதும் பயணம் செய்து பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை பெற்றுள்ளது. இத்தகைய கருத்துக்களை ஆய்வு  செய்ய  தங்களுக்கு போதிய  அவகாசம்  வழங்கப்படவில்லை என்று  எதிர்க்கட்சி 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பிய  நிலையில்,  அவர்கள்  இடைநீக்கம்  செய்யப்பட்டிருக்கிறார்கள். 

அரசின் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் வைத்து இந்த மசோதாவை ஆய்வு செய்து நிறைவேற்ற துடிக்கும் பாஜகவின் செயல் அப்பட்டமான ஜனநாயக விரோதம்.

சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் வண்ணம் வக்ஃபு திருத்த மசோதாவை கொண்டு வந்த பாஜக அரசு, எதிர்க்கட்சிகளின் கண்டனத்தால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பியது,
 ஆனால் தற்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலும் ஜனநாயகத்தை மீறி தனது சர்வாதிகார போக்கை செயல்படுத்த துடிக்கும் பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல் கடும் கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு வஃபு வாரிய தலைவரும் எம்.பி.யுமான நவாஸ்கனி கூறியுள்ளார்.