வேளச்சேரியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது,!

குற்றம்

வேளச்சேரியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது,!

வேளச்சேரியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது,!

5 கிராம் மெத்தபெட்டமைன், 36 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப் பொருள், கார் பறிமுதல்.!

சென்னை வேளச்சேரி சீனிவாச நகர் 6வது தெருவை சேர்ந்தவர் மணிகணடன்(34), இவர் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை வெளி மாநிலங்களில் இருந்து, வாங்கி வந்து நண்பர்களுக்கு மற்றும் தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். 

இந்த தகவலறிந்த வேளச்சேரி தனிப்படை போலீசார் சீனீவாச நகரில் கண்காணித்த போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை சோதனை செய்த போது, காரில் அமர்ந்து போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது அப்போது போதை பொருளுடன் கையும் களவுமாக பிடிபட்டனர். 

அப்போது மணிகண்டன் உடன் சந்தோஷ்குமார்(32), ராகுல்ராஜ்(32), ஜித்தேஷ்(22), பத்ரு சுஹைல்(22), இருந்தனர். அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து போலீசார் அவர்களிடமிருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன், 36 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். 

காவல் நிலையம் அழைத்துச் சென்று ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றனர்.