தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளர் நலவாரியத் திட்டத்தின் கீழ் பணிக்காலத்தில் இயற்கை மரணம் அடைந்த 2 பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.!
தென்காசி

தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளர் நலவாரியத் திட்டத்தின் கீழ் பணிக்காலத்தில் இயற்கை மரணம் அடைந்த 2 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000/- வீதம் ரூ.50,000 மதிப்பிலான காசோலைகளையும், 2025-2026 ஆம் நிதி ஆண்டில் 1 பயனாளிக்கு ரூ.4,24,066/- மதிப்பிலான ஆட்டோ வாகனம் வாங்குவதற்கு ரூ.1,48,423 மதிப்பிலான மானியத் தொகையினையும், 1 பயனாளிக்கு ரூ.11,66,910/- மதிப்பிலான சரக்கு வாகனம் வாங்குவதற்கு ரூ.3,50,000 மதிப்பிலான மானியத் தொகையினையும், 1 பயனாளிக்கு ரூ.8,53,379/- மதிப்பிலான சுற்றுலா வாகனம் வாங்குவதற்கு ரூ.2,98,583 மதிப்பிலான மானியத்
தொகை என மொத்தம் ரூ.7,97,006/- மதிப்பிலான மானியத் தொகையினை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார்.
செய்தியாளர்
AGM கணேசன்