குருதி கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன். !

மேட்டுப்பாளையம்

குருதி கொடையாளர்களுக்கு விருதுகள் வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன். !

சென்னையில் நடைபெற்ற உலகக் குருதி கொடையாளர் தினம் 2025 தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது.

இரத்ததானம் 50 க்கும் மேற்பட்ட முறை இரத்த தானம் செய்த தமுமுக கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதினை  பெற்றவர்கள் 
மு.அப்துல் ஹக்கீம் தமுமுக மமக கோவை வடக்கு மாவட்ட தலைவர், 
இ. சிராஜ்தீன் தமுமுக மாவட்ட துணை செயலாளர், தவ்பிக் தமுமுக மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் ஆகியோர் தமுமுக சார்பாக விருது பெற்றனர்.

மேலும் தன்னார்வலர்களான காந்தி மக்கள் மன்ற பொறுப்பாளரும் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் மல்லி ( எ ) சுப்பிரமணியம், மஸ்தான், ஜெயக்குமார் ஆகியோர் விருதினை பெற்றனர்.

மேலும் பல்வேறு மாவட்ட தமுமுக நிர்வாகிகள் இரத்த தான விருதுகளை பெற்றனர் .

இன் நிகழ்விற்கு ஆலோசனைகளை வழங்கிய மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகராஜ், இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் ராம் தீபிகா ஆகியோருக்கு நன்றியிணை தெரிவித்துக் கொண்டனர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சார்ந்த இரத்ததானக் கொடையாளர்கள்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )