ஒசூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற களப்பணியாற்றுங்கள் - பன்னீர் செல்வம்.!
கிருஷ்ணகிரி

ஒசூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக யார் அறிவிக்கப்பட்டாலும் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற களப்பணியாற்றுங்கள் - மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வி.பன்னீர்செல்வம் பேச்சு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சூளகிரி மேற்கு ஒன்றியம் சொன்னிப்புரம் பேரண்டபள்ளி, பத்தலபள்ளி பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமன மற்றும் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது
சூளகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பாபு என்கிற வெங்கடாசலம் அவர்களின் தலைமையில் நடந்த கூட்டத்தில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வி.பன்னீர்செல்வம், அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று புதியதாக பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய வி.பன்னீர்செல்வம்:
ஒசூரில் 2016 ம் ஆண்டு முதல்முறையாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சராகி 2.5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செய்து காட்டினார்..
அதேபோல 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒசூர் வேட்பாளராக யார் வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் ஆனால் அந்த வேட்பாளர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அதிமுக தொண்டர்கள் களபணியாற்ற வேண்டுமென பேசினார்,
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மதன் , மானிட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பொய்யாமொழி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சசிகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாரதி சின்னப்பையா, முன்னாள் கவுன்சிலர் ரவி, மாவட்ட பிரதிநிதி நவீன்,மற்றும் சூழகிரி மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர் பூத் கமிட்டி நிர்வாகிகள் என கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ