சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த நடித்து காட்டிய நாடக கலைஞர்கள்.!

ராணிப்பேட்டை

சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே  விழிப்புணர்வு ஏற்படுத்த நடித்து காட்டிய நாடக கலைஞர்கள்.!

சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே  தத்ரூபமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி நடித்து காட்டிய நாடக கலைஞர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓச்சேரி பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் அந்த நிகழ்வில் தெருக்கூத்து நாடக கலைஞர்களை கொண்டு தத்ரூபமாக வேடங்களை அணிந்து நாடகம் வாயிலாக சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் மேலும் தலைக்கவசத்தில் அத்தியாவசியம் குறித்தும் வாகனம் ஓட்டும்போது குடிக்காமல் வாகனத்தை ஓட்ட வேண்டும் எனவும் அதேபோல் ஆட்டோவில் பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் அதிக அளவில் ஆட்களை கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே காவலர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் சாலை விதிமுறைகளை பின்பற்றினால் விபத்துகளில் ஏற்படும் உயிர் சேதம் தவிர்க்கப்படும் இதனால் நம் குடும்பமும் பாதிப்படையாது எனவே சாலை விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என இன்னிக்கு வாயிலாக காவல்துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

செய்தியாளர்

அருள் அரசன்