இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
வாலாஜா பேட்டை

வாலாஜாபேட்டையில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் மற்றும் INRDBMA கட்டுமான அமைப்புசாரா சங்கத்தின் சார்பாக 11-வது ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் எழுச்சி மாநில மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது இதற்கு மாநில அமைப்பாளர் பாலசுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் சுரேஷ்குமார், மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் தமீம், மாவட்ட பொருளாளர் சங்கர், ஃபில்டர் அமைப்பு துபாய் சேட்டு, ரியல் எஸ்டேட் அமைப்பில் மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் அமைப்பின் மாநில துணைத்தலைவர் டாக்டர் அக்பர் ஷரீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் 22-ஆம் தேதி அன்று சென்னை நந்தனம் பகுதியில் நடைபெறும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களின் எழுச்சி மாநில மாநாட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து நிர்வாகிகளை வாகனங்களின் மூலமாக ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆலோசனைகள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது அதேபோன்று கூட்டத்தில் முக்கிய நோக்கமே ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் எழுச்சி மாநில மாநாடு அமைப்புசாரா பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது இந்த மாநாட்டின் முக்கிய கோரிக்கையாகவே உள்ளது என மாநில தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரியல் எஸ்டேட் சங்கத்தின் 21 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு ஆற்றிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டத்தின் வாயிலாக நிர்வாகிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது..
மேலும் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து நகர, ஒன்றிய, பேரூர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்
அருள் அரசன்