நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்களை தரக்குறைவாக பேசிய ஒன்றிய அமைச்சரின் உருவ பொம்மை எரிப்பு.!

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி செய்தியாளர் K.கோகுலகண்ணன்

*நாடாளுமன்றத்தில் திமுக எம்பி களை தரக்குறைவாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானை  கண்டித்து காவேரிப்பாக்கத்தில் திமுகவினர் அவருடைய உருவ பொம்மை எரிப்பு....*

இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தமிழக திமுக எம்பிக்களை தரக்குறைவாக பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் திமுகவினர் நகர செயலாளர் நரசிம்மன் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக நடந்து வந்து பெங்களூரு To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தி கொளுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இதனால் பெங்களூர் To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திடீரென திமுகவினர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தேசிய நெடுஞ்சாலையில் போட்டு எரித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ் உடன்

நெமிலி செய்தியாளர் K.கோகுல கண்ணன்