அருள்மிகு ஶ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி.!

வாலாஜாப்பேட்டை

அருள்மிகு ஶ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி.!

வாலாஜாப்பேட்டை அருள்மிகு ஶ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விடிய விடிய பரதநாட்டிய இசை பாடலுக்கு நடனமாடி அசத்திய பரதநாட்டிய கலைஞர்கள்.!

தமிழக முழுவதும் உள்ள சிவாலயங்களில் மஹா சிவராத்திரி பெருவிழாவில் திரளான பக்தர்கள் விடிய விடிய சிவாலயங்களில் இருந்து சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர் இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு காலை முதல் விடியற்காலை வரை எண்ணற்ற வகையிலான அபிஷேகம் மற்றும்  அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

இந்த நிலையில் கோவிலில் உள்ள மணிமண்டபத்தில்  மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வாலாஜாபேட்டை ஸ்ரீ ஓம் பத்மினி நிருத்யகலா நிகேதன் பரதநாட்டிய குழுவின் நாட்டிய கலைஞர் சீனிவாசன் முரளி தலைமையில் 12 பரதநாட்டிய குழுக்கள் இணைந்து 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் விடிய விடிய மேடையில் பரதநாட்டிய இசை பாடலுக்கு நடனமாடி அசத்தி காட்டினார்கள் தொடர்ந்து சன்டிவி எதிர்நீச்சல் சீரியல் ஷாரு பாலா (எ) ராதிகா வைரவேலன் மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகை சிந்துஜா ஆகியோர் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை ஆடினார்கள் மேலும் நடைபெற்ற மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர்.

செய்தியாளர்

அருள் அரசன்