பானுமதி அம்மாள் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சாலையோர ஏழை எளியோருக்கு அன்னதானம்.!
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையம் அருகாமையில் இயங்கி வரும் பரணி டி எல் ஸ்ரீ சாய் பார்கிங் பேலஸ் உரிமையாளரும் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவருமான துரை தக்ஷிணாமூர்த்தி மனைவியும் ஆற்காடு பன்னிரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினருமான டி. லோகேஷ் தாயார் பானுமதி அம்மாள் அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சாலையோர ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று சென்றனர் முன்னதாக பானுமதி அம்மாள் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் நண்பர்கள் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
ஆர்.ஜே.சுரேஷ்