அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் கோவில் மணி மண்டபத்தில் பதவி ஏற்று கொண்டார்.
ராணிப்பேட்டை

கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள் கோவில் மணி மண்டபத்தில் பதவி ஏற்று கொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை சார்பாக கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் ஆற்காடு தொழிலதிபர் A.V.சாரதி உட்பட 5 நபர்களும் கோவில் மணிமண்டபத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் ரத்தனகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஆகியோர் தலைமையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்து அறங்காவல குழுத்தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களாக பொறுப்பேற்று கொண்டனர்..
*அப்போது கூட்டத்தில் பேசிய துரைமுருகன்*
கந்தனை வள்ளி மணமுடித்த திருத்தலமாக விளங்கும் இக்கோவிலில் மலை குன்றில் உள்ள குகைகளில் ஜெய்னவ முனிவர்கள் வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பாக பவனந்தி முனிவர் வாழ்ந்து வந்து தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக நன்னூல் என்ற இலக்கண நூலை மலையில் எழுதினார் என்பதும் சமனையர் காலத்தில் இருந்தே வரலாறு என்று தெரிவித்தார்..
ஆனால் முருகன் வள்ளியை சிறைபிடித்த இடமாக தான் உள்ளதாக புராணம் சொல்கிறது ஆனால் எனக்கு தெரியாது நான் மதுரைக்கு சென்ற போது அங்கு வள்ளிமலை எங்கு உள்ளது என கேட்டபோது வள்ளியூர் என்ற ஊரில் தான் முருகன் வள்ளியை சிறை பிடித்து மணந்ததாக தெரிவித்த அவர் அப்படிப்பட்ட ஒரு நிணைப்பு இன்றளவில் உள்ளதாகவும் அந்த நினைப்பை போக்கியவர் கிருபானந்த வாரியார் போன்ற தன்னடமற்றவர்கள் தான் செய்துள்ளார்கள் என கூறினார்..
அதேபோல் இந்த தொகுதியில் நான் பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து இந்த கோவில் விவகாரத்தில் தலையிடுவதில்லை அதே நேரத்தில் எனது காட்பாடி தொகுதியில் உள்ள அனைத்து கோவில்களில் வளர்ச்சிக்காக அரசாங்க சார்பிலும் பெரிய பெரிய செல்வந்தர்களிடம் நிதியை திரட்டி தருவதில் எப்போதும் ஏந்த நேரத்திலும் சளைத்தவன் அல்ல என கூட்டத்தின் மத்தியில் கம்பீரமாக பேசினார்..
அதேபோன்று இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மற்றும் தலைவர் ஆகியோர் மக்களுக்காக உண்மையாகவும் நல்லதே நினைத்து நல்லதாகவே நடக்க வேண்டும் இல்லையென்றால் அடுத்த நொடியே உங்களை பதிவிலிருந்து எடுத்து விடுவேன் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்..