அனுமதியின்றி மண்ணெடுத்த ஜேசிபி மற்றும் லாரி பறிமுதல்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே அனுமதியின்றி மண்ணெடுத்த ஜேசிபி மற்றும் லாரி பறிமுதல்.
தப்பி ஓடிய நிலத்தின் உரிமையாளர் மற்றும் ஜேசிபி லாரி டிரைவர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் பகுதிக்கு உட்பட்ட வடகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 61) விவசாயி.இவர் தனக்கு சொந்தமான அதே பகுதியில் உள்ள நிலத்தில் அரசு அனுமதியின்றி ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மண் எடுத்து லாரியில் ஏற்றியுள்ளார்.இதுகுறித்து நெமிலி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
https://youtu.be/5mMru2BvAso?si=iDR9UBrH0PVGDVhh
போலீசார் வருவதை கண்டவுடன் அங்கு இருந்த ஜேசிபி,லாரி டிரைவர்கள் மற்றும் நிலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரும் தப்பிச்சென்றுள்ளனர்.இதனைத் தொடர்ந்து மண் எடுக்க பயன்படுத்திய ஜேசிபி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் நில உரிமையாளர் தனசேகரன்(61),ஜேசிபி டிரைவர் அசோக் (26),லாரி டிரைவர் வினோத்(27) உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.
செய்தியாளர்
ஆர் ஜே.சுரேஷ்குமார்.