ஜெயலலிதா ஆட்சியில் திட்டங்கள் விளக்க துண்டு பிரசுரம் வழங்கிய அதிமுக அம்மா பேரவையினர்.!
வாலாஜா பேட்டை

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஆட்சியில் திட்டங்கள் விளக்க துண்டு பிரசுரம் வழங்கிய அதிமுக அம்மா பேரவையினர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாராயணன் தலைமையில் நகர செயலாளர் W.G.மோகன் வரவேற்பில் சிறப்பு விருந்தினராக தெருமுனை திண்ணை பிரச்சாரத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு அதிமுக கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்த சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை பேருந்து நிலையத்தில் சுற்றியுள்ள சிறுகுறு வியாபாரிகள் பொதுமக்கள் வணிக நிறுவனங்கள் சாலை ஓர தள்ளுவண்டி கடை வியாபாரிகள் என அனைத்து பொதுமக்களிடையே நேரடியாக சென்று திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க வகையில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரத்தை வழங்கினார்..
இந்த நிகழ்வில் வாலாஜா கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பூண்டி பிரகாஷ், பூங்காவனம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மூர்த்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, மாவட்ட துணைச்செயலாளர் வேதகிரி, கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பேங்க் தேவராஜ், படையப்பாக்கம் மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏழில்அரசன், மற்றும் அதிமுக பிற அணி மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
அருள்