வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டா ஜூயோ அமைப்பினர் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம்.
வாலாஜா பேட்டை

வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டா ஜூயோ அமைப்பினர் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம்.!
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி - ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் ஒருவர் கழுத்தில் மாலை அணிவித்து தமிழக அரசுக்கு எதிராக கண்டனம்
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றாததை வலியுறுத்தி தமிழக முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் மாலை நேர ஆர்ப்பாட்டம் அறிவித்தது அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் 5 வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நிலையில் வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக மாவட்ட செயலாளர் யோசுவா தலைமையில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆதவன் பங்கேற்று கண்டன சிறப்பு உரையாற்றினார்.
இந்த ஆர்பாட்டத்தில் போது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை உடனடியாக விடுவிக்க கோரியும் இடைநிலை ஆசிரியர்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் 4 ஆண்டுகளாக கை வலிக்க கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தியும் எந்த ஒரு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இன்று நடைபெற்ற மாலை நேர போராட்டத்தின் போது ஆசிரியர் தமிழக அரசுக்கு கண்டன தெரிவிக்கும் வகையில் கோரிக்கைகளை மாலையாக கழுத்தில் அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் தொடர்ந்து வருகிற 25-ம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தகவல் தெரிவித்தனர்.
செய்தியாளர்
அருள்