ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டிக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மைதானங்கள் அமைத்து தர கோரிக்கை.!
தமிழகம்
ரோலர் ஸ்கேட்டிங் பேஸ்கெட் பால் போட்டிக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மைதானங்கள் அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு வீரர்கள் பயிற்சியாளர் என அனைவரும் கோரிக்கை
சர்வதேச ரோலர் ஸ்கேட் பேஸ்கட் பால் போட்டி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை இலங்கை கொழும்புவில் நடைபெற்றது இப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான டி சீரியஸ் போட்டி நடைபெற்றது
இந்தியாவில் இருந்து தமிழகம் அரியானா குஜராத் கர்நாடகா கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சார்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து நாங்கள் கலந்து கொண்டோம் இந்திய அணி 20 புள்ளிகளும் ஸ்ரீலங்கா அணி 12 புள்ளிகளும் பெற்றது இதன் மூலம் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெற்றி பெற்றுள்ளோம்.
ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளுக்கும் மூன்று போட்டிகள் நடைபெறும் அதில் 2 போட்டிகள் வெற்றி பெறுபவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்கள்.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து தமிழகம் ஆந்திரா கர்நாடகா கேரளா அரியானா குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர் இலங்கையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர் சென்னை விமான நிலையம் வந்து இந்திய அணியை இடம்பெற்ற செங்கல்பட்டு பகுதியை சார்ந்த வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது மேலும் விமான நிலையத்தில் வந்த அவர்களுக்கு உறவினர்கள் இனிப்புகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ரோலர் ஸ்கேட்டிங் பாஸ்கெட் பால் போட்டிக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் மைதானங்கள் அமைத்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர்
S S K