தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநில உ.பி. நபர்கள்.!
தமிழகம்

தமிழக – கர்நாடகா எல்லையான பாலாறு பகுதியில் காரைக்காடு சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர்கள் மற்றும் மதுவிலக்குப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் தனியார் பேருந்து மூலம் கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு செல்வதற்காக இவ்வழியாக வந்துள்ளனர்.
அப்போது, சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தியுள்ளனர். மேலும், கர்நாடகா மாநில சட்டத்துக்கான அனுமதி உரிமம் சீட்டை, அந்த சுற்றுலாப் பயணிகளிடம் போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு, அனுமதி சீட்டு இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று உ.பி சுற்றுலா பயணிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் போலீசாருக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதம் முற்றியதால், சுற்றுலா பயணிகள் கடப்பாரையைக் கொண்டு காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகளை தடுக்க முயற்சித்தனர். ஆனாலும், அந்த சுற்றுலா பயணிகள் காவலர்களை தாக்குவதில் குறியாக இருந்தனர். இதனால், பொதுமக்களும் உ.பி சுற்றுலா பயணிகளை தடியை எடுத்து அடித்துள்ளனர். பின்னர், இச்சம்பவம் தொடர்பாக குளத்தூர் காவல்துறையினர், விரைந்து வந்து காவலர்களை தாக்கிய சுற்றுலாப் பயணிகளை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.