பேரூராட்சி திமுக துணைத் தலைவர் சாதி ரீதியாக தன்னை அவமதிப்பு செய்வதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!
திண்டுக்கல்

எரியோடு பேரூராட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனது வார்டு பணிகள் புறக்கணிப் படுவதாக கூறி பேரூராட்சி திமுக துணைத் தலைவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பேரூராட்சி 2-வது வார்டு திமுக கவுன்சிலராகவும் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளரகவும் இருப்பவர் ஜீவா.
இவர் எரியோடு பேரூராட்சி மன்ற துணைத் தலைவராகவும் உள்ளார்.
இந்தநிலையில் ஜீவா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேரூராட்சி நிகழ்ச்சிகளில் தன்னை புறக்கணிப்பதாகவும் தீண்டாமை கடை பிடிப்பதாகவும் தனது வார்டில் நடக்கும் பணிகளை கூட தன்னிடம் தெரிவிப்பதில்லை என்றும் பேரூராட்சி நிர்வாகம் தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாகவும் இதுகுறித்து பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கேட்டால் உரிய பதில் அளிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி செயல் அலுவலரிடம் கேள்வி எழுப்பியபடி ஜீவா இன்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
முழுக்க முழுக்க திமுக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜனின் பேச்சை கேட்டுக் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்தார்
சமூக நீதி ஆட்சியில் தொடர்ந்து பட்டியலினவர் மீது இவ்வாறு செயல்படும் திமுக வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் மீது தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்தார்.
செய்தியாளர்
அழகர் சாமி