குரும்பர் இன பழங்குடி மக்களுக்கு சுடுகாடு வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம். !

திருப்பத்தூர்

நாட்றம்பள்ளி அடுத்த பழைய பேட்டை கிராமத்தில் குரும்பன்ஸ் பழங்குடி மக்களுக்கு சுடுகாடு வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் ஊராட்சி பழைய பேட்டை கிராமத்தில் குருமன்ஸ் பழங்குடி மக்கள் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பழங்குடி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 52 செண்ட் அளவிலான நிலத்தை ஒதுக்கீடு செய்து கொடுத்தனர். 

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இந்த பகுதிக்கு சுடுகாடு தர முடியாது அது தங்களுக்கு சொந்தமான இடம் என கூறி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. 

இது மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி வட்டாட்சியரிடம் பலமுறை புகார் கடிதம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. 

இதன் காரணமாக பாதிப்படைந்த பழங்குடி மக்கள் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் கூறியதன் காரணமாக இந்த கட்சியின் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியரை எதிர்த்து கண்டன கோஷங்கள் எழுப்பியும் உடனடியாக சுடுகாடு அமைத்து தர கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வட்டாட்சியரிடம் பேச்சு வார்த்தைக்கு சென்றபோது வட்டாட்சியர் அலுவலகத்தில் இல்லாததால் நிர்வாகிகள் அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்