தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தூய்மை பணியாளர் நலவாரிய அட்டையை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் தற்காலிக நிலையில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டையை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வழங்கினார்.
இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் கிருஷ்ணகிரி தாட்கோ மாவட்ட மேலாளர் வேல்முருகன் ஆகியோருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.
.செய்தியாளர்
மாருதி மனோ