தந்தையும் இறந்து விட்டதால் நாங்கள் நான்கு பேர் அனாதையாக நிற்கிறோம்  என பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு

திண்டுக்கல்

தனியார் தோட்டத்தில் வேலை செய்த பொழுது எனது தாய் மரம் விழுந்து இறந்து விட்டார் தோட்ட உரிமையாளர்கள் இழப்பீடு தருவதாக கூறி மூன்று வருடமாக தரவில்லை, எனது தந்தையும் இறந்து விட்டதால் நாங்கள் நான்கு பேர் அனாதையாக நிற்கிறோம்  என பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியிடம் புகார் மனு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப் பகுதியான  பெரியூர் ஊராட்சிக்கு உட்பட்ட செம்படியூத்து இப்பகுதியில் ஆதிவாசி பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி முத்துப்பாண்டி அவரது மனைவி மஞ்சுளா இவர்களுக்கு தயாளன், தயாளனி உள்ளிட்ட நான்கு குழந்தைகள் உள்ளதாகவும்

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு சேம்படியூத்து பகுதியில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் கணேசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலை செய்த பொழுது தனது தாயார் மஞ்சுளா மீது மரம் விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார் அப்பொழுது கணேசன் எங்களுக்கு இழப்பீடு தருவதாக கூறினார் ஆனால் அவர் இழப்பீடு தரவில்லை எனது தந்தையார் முத்துப்பாண்டி தொடர்ந்து  அதிகாரிகளிடம் புகார் மனு அளித்து வந்தார் இந்நிலையில் அவரும் கடந்த வருடம் இறந்து விட்டார். தற்போது வயதான எங்களது பாட்டி தாத்தாவுடன் வசித்து வருகிறோம் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரும் எங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் தரவில்லை நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம் என்று கூறி மாவட்ட ஆட்சியிடம் மனு கொடுத்தார்.

செய்தியாளர்

அழகர் சாமி